வடமேல், வடமத்திய மாகாணங்கள் மற்றும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் நீர் அருந்துமாறும், முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– காலநிலை அவதான நிலையம் –




